Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

வன்னி வரிய குடும்பங்களுக்கு வீடு நிர்மாணிபதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிப்படைவீட்டு வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் எடுக்கப்பட்ட முயற்சியினால், இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்;களுக்கு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது கடந்த திங்களன்று (15) தன்திரிமல பிரதேசத்தில் இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினது வேண்டுகோளிற்கமைய, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு தமித் கஹவிட்ட மற்றும் செல்வி மாரசிங்க உள்ளிட்டவர்கள் தன்திரிமல ரன்பத்விலவை சேர்ந்த திரு எச்.கே. அஜந்த விக்ரமஆராச்சி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழும் தன்திரிமல போகோடவெவவைச் சேர்ந்த திரு பி தர்மசேன உள்ளிட்ட குடும்பங்களுக்கான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்து வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் 21ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன, அவர்களின் ஆசிரவாத்த்தினால் மற்றும் முயற்சியினால் 212ஆவது படைத்தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் அணில் பீரிஸ் அவரகளினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமானமான திட்டத்திட்டமாகும்.

அதனைத் தொடந்து, இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட 212ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி வீட்டு நிர்மாணத்திற்கான அடிக்கல்லினை பயனாளிகள் மற்றும் பல அதிகாரிகளின் முன்னிலையில் நாட்டினார்.

மேலும் வன்னி பாதுகாப்பு படை தலைமையகமானது கடந்த 8 மாங்களாக 10 வீடுகளை வரிய குடும்பங்களின் தேவையினை பூர்த்தி செய்யுமுகமாக மதவாச்சி, வவுனியா, புலேலிய, மணலாறு, சீப்புகுளம, கஹட்டகடிகிளிய மற்றும் வேறு சில இடங்களில் நிரமாணித்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Running sport media | シューズ