Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2020 12:38:06 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதி பதவியேற்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜேஎம்யுடி ஜயசிங்க அவர்கள் 21 ஆம் திகதி வியாழக்கிழமை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார். இவர் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு 20 ஆவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

நிகழ்வின் முதல் நிகழ்வாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் உள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் மேஜர் ஜெனரல் ஜயசிங்க அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றார்.பின்னர், அவர் இந் நிகழ்வின் அடையாளமாக தலைமையக வளாகத்தில் மாங்கன்றை நாட்டினார்., தொடர்ந்து அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துf; கொண்டார்.

இந்த நிகழ்வில் வன்னி முன்னரங்க பாதுகாப்பு படையின் தளபதி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் படையினர்கள் பலரும் சுகாதார நடைமுறைக்களுக்கமைய கலந்துகொண்டனர். Adidas shoes | Nike Releases, Launch Links & Raffles