12th January 2020 11:00:12 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் வட மத்திய முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள கட்ட ளை பட்டாலியன்களுக்கு கடந்த (08) ஆம் திகதி விஜயத்தை மேற் கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, 3 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணி, 2 ஆவது பொறியியலாளர் சேவை படையணி, 3 ஆவது இலங்கை இராணுவ வைத்திய சேவை படையணி, 3 இலங்கை இராணுவ பொலீஸ் மற்றும் அனுராதபுரத்தில் உள்ள இராணுவ மருத்துவமனை ஆகியவற்றிற்கு விஜயத்தை மேற் கொண்டதுடன், அந்த படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளுடன் நிர்வாக மற்றும் இராணுவ செயல்பாட்டு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன் போது வருகை தந்த வன்னி தளபதிக்கு ஒவ்வொரு பட்டாலியன் மற்றும் படைப் பிரிவுகளின் கட்டளை தளபதிகள் தங்கள் திட்டங்கள் தொடர்பாக விளகங்களை தெரிவித்தனர். affiliate link trace | Nike