22nd May 2020 13:15:06 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு புதிய வீடுகளை அமைப்பதற்கான அடிக்கலினை தேசிய போர் வீரர்கள் தினத்தில் (19) வன்னியில் நாட்டியது.
212 வது படையின் தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த நன்கொடையாளர்களான திருமதி நிலந்தி லியானகே மற்றும் திரு மாலன் ராஜபக்ஷ ஆகிய இருவரும் குறுகிய காலத்திற்குள் இரண்டு வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். jordan release date | nike air jordan lebron 11 blue eyes black people