Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 12:19:12 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் எற்பாடு செய்யப்பட்ட முன்னாள் படைவீரர்களின் 'ஒன்றுகூடுதல்” நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் முயற்சியால் யாழ் குடா நாட்டில் வசிக்கும் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற படையினர்களின் 'ஒன்றுகூடுதல்” நிகழ்வானது யாழ் தலைமையகத்தினரால் யாழ் தல்செவன ஓய்வு விடுதியில் (11) ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

1980 கள் மற்றும் 1990 களில் பணியாற்றிய 22 வருட சேவையை நிறைவு செய்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்காக இந்த இனிமையான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன, இந்த நிகழ்வின் ஊடாக அவர்களின் பழைய நாட்களையும் கடந்தகால நினைவுகளையும் நினைவுபடுத்தி கொண்டாடினர். அத்துடன் யாழ் பாதுகாப்பு படையினரால் அவர்களுக்கு மதிய உணவு மற்றும் இராணுவ இசைக்கலைஞர்களால் இன்னிசையும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 55 ,51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சாஜன் மேஜர், உட்பட ஓய்வு பெற்ற படையினர்களும் கலந்து கொண்டனர். bridgemedia | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK