Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2018 23:58:25 Hours

யாழ் பாதுகாப்பு படைப் பிரிவினரின் 2018ஆம் ஆண்டிற்கான வினாவிடை போட்டிகள்

யாழ் பாதுகாப்பு படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஆலோசனைக்கமைய படையினரின் அறிவை மேம்படுத்தும் நோக்கில் முதன் முறையாக 33படைப் பிரிவூகளின் படையினருக் கிடையிலான வினாவிடைப் போட்டியின் இறுதிச் சுற்று இடம் பெற்றது.

இப் போட்டியானது 51ஆவது படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின அவர்களின் கண்காணிப்பில் இவ் வினாவிடைப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த வியாழக் கிழமை(29) இடம் பெற்றதோடு இதன் இறுதிச் சுற்றில் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் 10ஆவது படைப் பிரிவினர் வெற்றி பெற்றனர்.

அந்த வகையில் 33 படைப் பிரிவூகளிலும் 05 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் இரண்டாம் சுற்றிற்கு 08குழுக்கள் பங்கேற்றனர். அதன் பிற்பாடு நான்கு குழுக்களின் தெரிவில் இரு குழுக்கல் இறுதிச் சுற்றிற்கு தகுதிபெற்றன.

இப் போட்டிகளில் 10ஆவது பீரங்கிப் படையின் மேஜர் நிஷ்ஷங்க ராமநாயக்க அவர்களின் குழுவினர் வெற்றி பெற்றனர். மேலும் இரண்டாம் இடத்தை இலங்கை படைக்கலச் சிறப்பணிப் படையினர் பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் வெற்றி பெற்ற படையினருக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

இதன் போது 51 52 55 படைப் பிரிவூகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ விமானப் படை மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Running sport media | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092