Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2019 17:59:00 Hours

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு 52ஆவது படையினரால் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகமானது ஜப்பானிய வெளிநாட்டு சங்கத்தின் அனுசரனையுடன் சாவகச்சேரியில் உள்ள ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை மாணவர்கள் 27பேரிற்கு பாசடாலை உபகரணங்கள் கடந்த புதன் கிழமை (06) 52ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந் நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஆசிகளுடன் இடம் பெற்ற இந் நிகழ்வில் 522ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரதம அதிதியாக இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் 52ஆவது படைத் தலைமையகத்தின் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் போது பாடசாலை பைகள் பேனைகள் சித்திரக் கொப்பிகள் போன்ற பல பாடசாலை உபகரங்கள் இச் சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் போது ஜப்பானிய நன்கொடையாளர்கள் சிறார்களுடன் கலந்துரையாடினர். மேலும் இவர்கள் இப் பாடசாலைக்கு வரவேற்கப்பட்டு பாடசாலை வளாகத்திற்கு மாணவர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந் நிகழ்வில் பெண் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போன்றோர் இராணுவ அதிகாரிகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்ததுடன் 52ஆவது படைப் பிரிவின் பல இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்; படையினர் கலந்து கொண்டனர். buy footwear | シューズ