Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2019 18:19:29 Hours

யாழ் படையினரால் வறிய குடும்பத்தினருக்கு இரு புதிய வீடுகள் நிர்மானித்து வழங்கல்

யாழ் சோலிபுரம் பிரதேசத்தில் வறிய குடும்பங்களிற்று இரு புதிய வீடுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்ச அவர்களின் தலைமயில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இப் புதிய இரு வீடுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது மற்றும் 52ஆவது படைப் பிரிவுகள் காணப்படும் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்ச அவர்களின் தலைமயில் இவ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இவ் வறிய குடும்பங்களிற்கான புதிய வீடுகளை 512 மற்றும் 521ஆவது படைப் பிரிவுகளின் கீழ் இயங்கும் 14ஆவது கஜபா படையணி மற்றும் 5ஆவது விஜயபாகு காலாட் படையணியினர் போன்றோரினால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் வழங்கப்பட்ட நன்கொடையின் மூலம் இவர்கள் இப் புதிய வீடுகளை நிர்மானித்து வழங்கியுள்ளனர்.

மேலும் இப் பிரதேசத்தின் கிராம சேவகர் பிரிவின் அதிகாரிகள் இவ் வறிய குடும்பத்தின் நிலைமைய சுட்டிக்காட்டியதுடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இவ் வீடுகள் அமைத்து வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 51ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின 52ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜிஜெஎல் வடுகே மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike footwear | Women's Designer Sneakers - Luxury Shopping