Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2019 19:04:13 Hours

யாழ் படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற கணினி பயிற்சிகள் நிறைவு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ‘ஒரின்ட் லங்கா எகடமி’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படை தகவல் தொழில்நுட்ப கணனி பயிற்சிகள் நிறைவு விழா யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (19) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த அடிப்படை பயிற்சிகள் மூன்று கிழமையாக 21 படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த பயிற்சி நெறிகளில் முதலாவது இடத்தை 6 ஆவது பொறியியல் படையணியைச் சேர்ந்த போர் வீரன் L.H.N பொன்சேகாவும், இரண்டாவது இடத்தை 14 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த போர் வீரன் M.M.S உதய குமாரவும் மூன்றாவது இடத்தை 3 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த போர் வீரன் M.G.C.B ஜயதிலக அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பிரதம அதிதியான யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை பிரதானி பிரிகேடியர் பிரியந்த கமகே அவர்கள் பயிற்சியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற படை வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கி வைத்து கெளரவித்தார். best shoes | Ανδρικά Nike