11th April 2018 13:18:12 Hours
அனைத்து மக்களினதும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம் படுத்தும் நேக்கத்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வாழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வானது கடந்த (09) ஆம் திகதி யாழ் பொல்செவன விளையாட்டு மைதானத்தில் நடைப் பெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கிலும் ஒரே தினத்தில் கொண்டாடும் இந்த புத்தாண்டு நிகழ்வில் கலாச்சார நிகழ்வுகள் விளையாட்டுகளும் இந் நிகழ்வில் இடம் பெற்றன.
இப் புத்தாண்டு நிகழ்வானது வீட்டுக்கு செல்லாமல் பணயில் இருக்கும் இராணுவத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
இராணுவத்தினரின் அந்நியோன்ய நட்புகளை வெளிகொண்டு வரும் நோக்கத்துடன் இந் நிகழ்வுகளில் பங்கு பற்றிய வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்கதில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் இப் புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன். அழகுராணி மற்றும் அழுகு ராஜகுமாரன் தேர்தெடுக்கும் போட்டிகளில் உட்பட சம்பிரதாய விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் விமானப்படை அதிகாரிகள் மற்றும பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
Asics footwear | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth