Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2019 13:02:23 Hours

மேஜர் ஜெனரல் கெப்பிடிவலான அவர்களுக்கு அவரது தலைமையகத்தில் கௌரவ மரியாதை

இலங்கை இராணுவ சேவையிலிருந்து 35 வருட காலங்களை கடந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் துமிந்த கெபிடிவலான அவர்களுக்கு அம்பேபுஸ்சையிலுள்ள அவரது தாய்ப் படையணியான சிங்க படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிங்கப் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை சிங்கப் படையணியின் பிரதி மத்திய கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சுபாஷ் சிறிவர்தன அவர்கள் வரவேற்று பின்னர் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்களது தலைமையில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தலைமையகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களின் ஞாபகார்த்த நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி கௌரவ அஞ்சலியும் செலுத்தினார் . அதன் பின்னர் படைத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் பங்கேற்றிக் கொண்டார்.

இந்த உயரதிகாரி இராணுவ காலாட் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார். இவர் தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ எகடமியில் அதிகாரி 20 இலக்க பிரிவின் கீழ் 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து இராணுவத்தில் 35 வருடங்களை பூர்த்தி செய்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார் எனபது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவரது கௌரவமளிக்கும் நிகழ்வில் சிங்கப் படையணியைச் சேர்ந்த உயரதிகாரிகளான மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, மகளிர் படையணயின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்நாயக, பொது பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் A.M.R தர்மசிறி, 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் W.A.K.B உதுலுபொல, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Asics footwear | Jordan Shoes Sale UK