12th January 2020 23:35:30 Hours
சமாதானம் மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் கால்ப்பந்து விளையாட்டை முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களுக்கு ஊக்கி வைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் கால்பந்தாட்ட பயிற்சி முகாம் முல்லைத்தீவிலுள்ள இரனைபாலை புனித அந்தோனியார் மைதானத்தில் இம் மாதம் 11- 12 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
சிவில் 19 கால்பந்து கழகங்களைச் சேர்ந்த 172 விளையாட்டு வீர ர்களும், இராணுவத்தைச் சேர்ந்த 4 கழகங்களைச் சேர்ந்த 36 விளையாட்டு வீரர்கள் இந்த பயிற்சி முகாம்களில் இணைந்து கொண்டனர்.
முதல் நாள் 11 ஆம் திகதி ஆரம்பமான பயிற்சி முகாமை ஆரம்பித்து வைப்பதற்காக 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் R.M.J.P ரத்னாயக அவர்கள் வருகை தந்தார். இவரை 683 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நலின் ஹெட்டியாரச்சி அவர்கள் வரவேற்றார்.
பயிற்சி முகாமில் இணைந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவுகள் மற்றும் குளிர் பாணங்கள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன. Nike air jordan Sneakers | Air Jordan Sneakers