Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2019 18:14:09 Hours

முல்லைத்தீவில் முன்பள்ளிகள் மறுசீரமைப்பதற்கு இராணுவத்துடன் இணைந்த 'எம்.ஏ.எஸ் லெஷர் லயின்ஸ் நிறுவனத்தார்

59, 593 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 'எம்.ஏ.எஸ் லெஷர் லயின்ஸ் நிறுவனத்தாரின் அனுசரனையில் திரேஷா அம்மன் மற்றும் பால் நிலவு கொக்குதுடுவாய் முன்பள்ளி பாடசாலைகள் மீள் புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தது.

இந்த கட்டிட மீள் நிர்மான முடிவை முன்னிட்டு நிகழ்வொன்று பெப்ரவாரி மாதம் (28) ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக் காட்டலின் கீழ் 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் லங்கா அமரபால அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த கட்டிட மீள் நிர்மான பணிகள் 19 ஆவது கெமுனு காலாட் படையணி, 5 (தொண்டர்) சிங்கப் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இந்த கட்டிடங்கள் மீள் நிர்மானித்து முன்பள்ளி நிருவாகத்திற்கு வழங்கும் நிகழ்வில் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் லங்கா அமரபால 'எம்.ஏ.எஸ் லெஷர் லயின்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு சந்தன பண்டார மற்றும் அந்த நிறுவனத்தின் சில அதிகாரிகளும், பெற்றோர்கள் உட்பட அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாசிகள் 150 பேர்கள் இணைந்திருந்தனர். buy footwear | Sneakers