Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2019 14:35:36 Hours

மீன்பிடி சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பான ஆராய்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே ஏ டப்ள்யூ குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் கொடைக்கடியார்குளம், அக்கராயன்குளம், அனவிலந்தகுளம் மற்றும் அம்பலபெரமல்குளம் போன்ற பகுதிகளில் மீன்பிடித் துறைகளில் ஈடுபடும் நபர்களது தொழிலுக்கு அக்கறை செலுத்தும் விடயங்கள் தொடர்பாக இம் மாதம் (16) ஆம் திகதி இராணுவத்தினர் மற்றும் மீன்பிடி தொழிலாளிகளுக்கு இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீர்ப்பாசனத் தொட்டிகளை வெளியில் உள்ள தொழிலதிபருக்கு குத்தகைக்கு விடுதல் மற்றும் அதிக மீன்பிடி உபகரணங்கள் தேவைப்படுவது தொடர்பாகவும், விடுமுறை காலங்களில் கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கான பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. Buy Kicks | Men Nike Footwear