Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 15:00:06 Hours

மகளிர் படையணியினரின் சமூகத்துடனான ஒத்துழைப்பு தொடர்பான கருத்தரங்கு

இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் பாரிய அளவிலான தலைமைத்துவ மற்றும் அபிவிருத்தி நிகழ்வுகளை சமாதானத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பான ஊடக சந்திப்பானது இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு ஹில்டன் விடுதியில் மதியம் (27) இடம் பெற்றது.

அந்த வகையில் இலங்கை இராணுவ மகளிர் படையணியினரின் பெண்களின் சமாதானம் மற்றும் அபிவிருத்தி எனும் தலைப்பிலான கண்காட்சியானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் எதிர்வரும் 04ஆம் திகதி டிசெம்டபர் மாதம் சமூகத்தில் வெவ்வேறு பிரிவுகளில் தலைமை தாங்கும் கிட்டத் தட்ட 450 பெண்களை உள்ளடக்கி இடம் பெறவுள்ளது.

மேலும் இக் கண்காட்சியானது சமூகத்தில் கற்கை மற்றும் தீர்மானம் எடுத்தல் தொடர்பான விடயங்களை பெண்கள் விருத்தி செய்தல் தொடர்பானதாக அமைகின்றது. மேலும் முதல் முறையாக இலங்கை இராணுவ மகளிர் படையணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்டியானது மேலும் பல வெவ்வேறு தலைப்புக்களுடன் அமைகின்றது.

இவ் ஊடக சந்திப்பில் பயிற்றுவிப்பு பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி இலங்கை இராணுவ மகளிர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் மனோச் முதநாயக்க கொழும்பு பல்கலைக்கழக சட்டப்பிரிவின் விரிவூரையாளரான ஜீவநிரிஅல்ல அத்துடன் தனியார் நிபுனர் சட்டத்தரணி சட்டப் பிரிவூ சங்கத்தின் பங்காளரான வைத்தியர் தயனி பனாகொடை இலங்கை இராணுவ மகளிர் படையணியின் மேலதிக படைத் தலைமையகத்தின் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான மேஜர் நயோமி ரத்நாயக்க மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியினர் சட்ட அதிகாரியான கேர்ணல் புத்திக்க பெணான்டஸ் போன்றௌர் கலந்து கொண்டனர். buy footwear | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf