Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பொசன் கொண்டாட்டத்தை முன்னிட்டு 500 நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பு –மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி

வரவிருக்கும் பொசன் நிகழ்விற்கு இணையாக பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ பௌத்த சங்கம் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகம் வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் ஏழை குடும்பங்கள் 500 உலர் உணவு பொதிகள் விநியோக நிகழ்வு வளாக விகாரையில் புதன்கிழமை (3). இடம்பெற்றது.

மேற்கு பாதுகாப்புப் படை தளபதியும் இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன பிரதேச செயலகத்துடன் கலந்தாலோசித்து பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தார் அவர்களில் பலர் கொவிட் -19 தொற்று நோயால் பரவலால் பாதிக்கப்பட்ட 11 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள். பனகொடை இராணுவம் வளாகத்தின் ஸ்ரீ போதிராஜா ராமயா வளாகத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நன்கொடைக்கான நிதியுதவியினை இலங்கை இராணுவ தொண்டர் படை, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகம், இராணுவ பௌத்த சங்கம் மற்றும் பனாகொடை இராணுவ வளாகத்திற்குள் உள்ள அனைத்து படைப்பிரிவுகளும் வழங்கியிருந்தன.

பிரதம அதிதியாக இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவரும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தார். Nike air jordan Sneakers | THE SNEAKER BULLETIN