Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பெட்மின்டன் போட்டிகளில் 10 ஆவது இலேசாயுத காலாட்படையணிக்கு வெற்றி

65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ படையினர்களுக்கு இடையில் நடாத்திய பெட்மின்டன் போட்டிகளில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இந்தப் போட்டிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது தலைமையில் (21) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.

65 ஆவது படைப் பிரவின் கீழுள்ள 651, 653 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய படையணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றுப் போட்டிகள்10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 21 (தொ) இலேசாயுத காலாட் படையணிக்கு இடையில் இடம்பெற்றதுடன் இதில் 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

10 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த சாஜன்ட் பி.ஆர் இந்துனில் குமார அவர்கள் இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு படைத் தளபதியினால் வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. buy shoes | Sneakers