Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2017 15:54:44 Hours

புதிய சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ‘தலைமை,நேர்மறையான அணுகுமுறைகள் மற்றும் ஒழுக்க அபிவிருத்திகள் தொடர்பான விழிப்புணர்வு

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தலைமை>நேர்மறையான அணுகு முறைகள் மற்றும் ஒழுக்க மேம்பாடு தொடர்பாக 95 பெண் அதிகாரிகள் உட்பட புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் (21) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை சாலியவெவ கலாஒய இராணுவ பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக்கருவிற்கு அமைய இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் கலாஒய இராணுவ பயிற்சி நிலையத்தின் கட்டளை தளபதியான பிரிகேடியர் ரந்துல ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த திட்டம், இராணுவ கட்டடத்திற்கு 1/3 அர்ப்பணிப்புடன், இராணுவ நிர்வாகத்தை ஆதரிக்கும் நோக்கில், எந்த வகையிலும் வழிநடத்தும் நோக்கத்துடன், அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என்று இராணுவ தளபதியின் கருத்தியல் கருத்துடன் இடம்பெற்றது.

பல சமுதாய சமூகங்கள் வாழும் நாட்டில் பல்வேறு இடங்களுக்கு இவர்கள்கடமைகளுக்கு அனுப்பப்படுவதால்,ஆளுமை>தலைமை மற்றும் முறையான நடத்தை பற்றிய புதிய சமுர்த்தி அதிகாரிகள் பற்றிய அறிவை மேம்படுத்தும்நோக்கத்டன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வின்போது இந்த சமுர்த்தி அதிகாரிகளுக்கு இந்த சேவையின் முக்கியதுவம் தொடர்பான உரையை பிரிகேடியர் ரந்துல ஹதன்கொட அவர்கள் ஆற்றினார்.

இந்த நிகழ்வில் அநுராதபுர மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அனுராதா திஸாநாயக>இராணுவ சிரேஷ்ட அதிகாரியான கேர்ணல் சசிக பெரேரா மற்றும் சமுர்த்தி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Sports brands | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes