Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2019 16:39:54 Hours

புதிய கடற்படைத் தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு

கடற்படையில் புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி ரியர் அத்மிரால் பியல் டீ சில்வா அவர்கள் இன்று காலை இராணுவ தளபதியின் அழைப்பையேற்று இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்தார். இவரை இராணுவ பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பிரதீப் கமகே அவர்கள் வரவேற்றார்.

இங்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி வரவேற்று இராணுவ கஜபா படையணியினால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அச்சமயத்தில் கடற்படைத் தளபதியுடன் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இணைந்திருந்தார்.

பின்னர் கடற்படைத் தளபதி இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பணிமனையில் சென்று சந்தித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

அதன் பின்பு இராணுவ தளபதியினால் கடற்படைத் தளபதிக்கு அங்கு வருகை தந்த மூத்த இராணுவ அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் இராணுவ தளபதி மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இறுதியாக பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கடற்படைத் தளபதி அவரது வருகையையிட்டு கையொப்பமிட்டார். Best jordan Sneakers | Men's Sneakers