Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2019 17:18:08 Hours

புதிய இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி வாழ்த்து

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் 2019 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி காலை பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அலுவலகத்தில் வைத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதாணியான அட்மிரல் ரவிந்திர சி. விஜயகுணவர்தன அவர்களை சந்தித்தார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அலுவலகத்தின் இராணுவ பொது நிர்வாக பிரதாணி மேஜர் ஜெனரல் ரசிக பெனாண்டோ உட்பட கடற்படை மற்றும் விமானப்படையின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கை இராணுவத்தில் 23 ஆவது இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவியேற்றதற்கு பின்னர் பாதுகாப்பு பதவி நிலை பிரதாணியை முதல் தடவையாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அட்மிரல் ரவிந்திர சி. விஜயகுணவர்தன அவர்கள் புதிய இராணுவ தளபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டில் பாதுகாப்பு முக்கியத்துவம் தொடர்பாக கலந்துரையாடின, பின்னர் இறுதியில் இந்த சந்திப்பின் நினைவாக இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொண்டனர்.

இராணுவ தளபதி பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அலுவலகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு விஷேட அதிதிகள் புத்தகத்தில் கையெழுத்திட்டார். Nike air jordan Sneakers | Mens Flynit Trainers