Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2019 08:51:02 Hours

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இராணுவத்தினரால் இரு நீர்பாசன குளக்கட்டுகள் மீள்திருத்தப்பட்டன

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினரால் பொது மக்களின் வாழ்வாததார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் யாழ் காரைநகர் பிரதேசத்தில் காணப்பட்ட இரு குளக்கட்டுகளை மீள்திருத்தியுள்ளனர். மேலும் இந் நீர்பாசன குளக்கட்டுகள் போதிய அளவு நீரைத் தேக்காத காரணத்தால் இவற்றை மீள்திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினரான திரு அங்கஜன் இராமநாதன் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்திற்கான நன்கொடையானது பாராளுமன்ற உறுப்பினரான திரு அங்கஜன் இராமநாதன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளதுடன் இப் பணிக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் மனிதவளம் போன்றன யாழ் பாதுகாப்பு படைத் தலையைமகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இக் குளக்கட்டை திறந்து வைக்கும் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் பாராளுமன்ற உறுப்பினரான திரு அங்கஜன் இராமநாதன் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) காரைநகர் பிரதேச செயலாளர் 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி இராணுவ உயர் அதிகாரிகள் யாழ் - விவசாய மேலதிக ஆணையாளர் படையினர் மற்றும் தேவை நாடும் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.jordan release date | Gifts for Runners