06th July 2018 13:15:12 Hours
கதிர்காமத்திற்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு 24 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 23 ஆவது சிங்கப் படையணியினால் அம்பாறையில் வைத்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒகண்டாவின் கிழக்கே உள்ள யாலை தேசிய பூங்கா சரணாலயத்திற்குள் பக்தர்கள் பிரவேசிப்பதற்காக நுழைவாயில் திறக்கப்பட்டு 24 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களால் இந்த பக்தர்கள் வரவேற்கப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் ஜே வெத்தசிங்க அவர்களும் இணைந்திருந்தார்.
பின்னர் இந்த பக்தர்களுக்கு இராணுவ 23 ஆவது சிங்கப் படையணியினால் குடிநீர் போத்தல்கள் விநியோகிக்கப்பட்டன.
Sports brands | UOMO, SCARPE