Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th March 2018 08:46:46 Hours

பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51 மற்றும் 515 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கீரிமலை மற்றும் நெலினகபுரம் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் (3) ஆம் திகதி சனிக் கிழமை வழங்கப்பட்டன.

515 படைப்பிரிவின் ஒருங்கிணைப்புடன் 2 ஆவது கெமுனு காலாட் படையணியின் முழுமையான ஒத்துழைப்புடன் குறைந்த வருமானத்தை பெறும் 30 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது அழைப்பையேற்று வருகை தந்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

buy footwear | UOMO, SCARPE