Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2018 16:10:19 Hours

படையினரால் தமிழ் பாடசாலைக்கான சிறுவர் பூங்கா நிர்மானித்து வழங்கல்

முல்லைத்தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59ஆவது படைப் பிரிவின் 591ஆவது படைப் பிரிவினரால் ஆறுமுகத்துக்குளம் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சிறுவர் பூங்கா நிர்மானித்து வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ருவன் வனிகசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இவ் பூங்காவிற்கான அனுசரனையை சாந்தி அமைப்பகம் முல்லைத் தீவூப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் அனுசரனையோடு இடம் பெற்றது.

இதன் போது மாணவர்களுக்கான பரிசில்களும் 591ஆவது படைப் பிரிவினரால் வழங்கப்பட்டதோடு இதற்கான ஒத்துழைப்பை வழங்கிவைத்த இராணுவத்தினருக்கு தமது நன்றிகளையூம் பாராட்டுக்களையும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் 591ஆவது படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் படையினர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

latest jordans | Asics Onitsuka Tiger