Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

படைப் பிரிவுகளுக்கிடையிலான கரபந்தாட்ட போட்டியில் 22 ஆவது படைப் பிரிவினர் வெற்றி

இலங்கையில் தேசிய விளையாட்டை ஊக்குவிக்கும் நிமித்தம் அதே வேளை இராணுவம் கரபந்தாட்ட அணி மற்றும் தேசிய கரபந்தாட்ட அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி திறமையான வீரர்களைக் தேர்ந்தெடுக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கரபந்தாட்ட போட்டியானது கடந்த (3) ஆம் திகதி புதன்கிழமை ஒரு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் பொலன்னருவை தேசிய விளையாட்டு மைதான வளாகத்தில் இடம் பெற்றன.

இப் போட்டியானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருணஜயசேகர அவர்களின் பூர்ண ஆதரவுடன் இடம் பெற்றதுடன் இறுதியில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக அணியை தோற்கடித்து 22ஆவது படையணி அணி வெற்றிப் பெற்றது.

இப் போட்டியில் சிறந்த வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்க பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி கலந்து கொண்டார். இப் போட்டியின் வெற்றியாளர்களின் விபரம் :

சிறந்த வீரர் - கிழக்கு பாதுகாப்புப் படையின் லான்ஸ் பொம்படியர் ஐ.டபில்யூ.எஸ் இலுக்குவத்த

சிறந்த Attacker – 22 ஆவது படைப் பிரிவின் எச்.எம்.எச்.எம் ஜயரத்னா

சிறந்த Setter – 22 ஆவது படைப் பிரிவின் பி.டி.கே மதுசங்க Sports brands | Sneakers