Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2018 19:33:14 Hours

திருகோணமலையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற நத்தார் நிகழ்வு

திருகோணமலை குவாட்லூப் மாதா முன்பள்ளி பாடசாலையில் (4) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நத்தார் கெரேல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வணக்கத்திற்குரிய ஆயர் நோயல் இமானுவேல் அவர்களும், அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடன் இடம்பெற்றது. அதன்போது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களுக்கு அவரது சேவையை பாராட்டி வணக்கத்திற்குரிய அருட் தந்தை பீ. ஜயபாலன் அவர்களினால் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முன்பள்ளி சிறார்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, 221 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் டீ.பி.யூ குணசேகர, முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர். best Running shoes | Nike Shoes