Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2018 09:54:41 Hours

சிங்கப் படையணித் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

இலங்கை சிங்கப் படையணித் தலைமையகத்தின் புதிய 10ஆவது கேர்ணல் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் அபேபுஸ்சவில் அமைந்துள்ள இப் படைத் தலைமைகயகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (07)தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

இவ்வாறு வருகை தந்த புதிய படைத் தளபதியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் பல உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் படையினர் போனறோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் தமது அதிகார பூர்வ கையொப்பத்தை மத அனுஷ்டானங்களுக்கமைவாக மங்கள விளக்கேற்றலுடன் இட்டார்.

அதனைத் இப் படைத் தளபதியவர்கள் சிங்கப் படையணியின் நினைவுத் துாபிக்கு அஞ்சலி செலுத்தினார் அத்துடன் இப் படைத் தலைமையகத்தில் இவ் அதிகாரியவர்களால் மரநடுகையும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையக நீச்சல் தடாக வளாகத்தில் தேநீர் விருந்துபசார நிகழ்வு இடம் பெற்றதோடு இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இப் படைத் தலைமையக தளதியவர்கள் இங்கு காணப்பட்ட படையினருடனான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் சிங்கப் படையணியானது ஆரம்பிக்கப்பட்டு 62 வருடங்களை அடைந்துள்ளது.

அத்துடன் தம்மிடம் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிவில் சேவகர்களுக்கு தமது எதிர்கால வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் அனைத்து படையினருக்குமான மதிய நேர விருந்துபசார நிகழ்விலும் இவ் அதிகாரியவர்கள் கலந்து கொண்டார்.url clone | Nike News