Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th May 2018 13:09:29 Hours

கொமாண்டோ படையணியில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி உணவு இல்லம்

கனேமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிகாரிகள் உணவு இல்லம் திறந்து வைக்கும் நிகழ்வு (04)ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றதோடு கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்களை கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா உட்பட் அனைத்து அதிகாரிகளும் மரியாதையுடன் வரவேற்றனர். ஆதனைத் தொடர்ந்து இராணுவ தளபதியவர்களால் சுப நேரத்தில் இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து, இராணுவ தளபதியவர்கள் அதிகாரிகள் உட்பட புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி உணவு இல்லத்தின் அறைகள் விருந்தினர் அறைகளை பார்வையிட்டனர்.

இந் நிகழ்விற்கு இராணுவ தளபதியவர்களின் வருகை மற்றும் புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கு இராணுவ தளபதியவர்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவ படுத்தும் முகமாக கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா அவர்களால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

பின்னர், இராணுவ தளபதி விஜயத்தின் அடையாளமாக விருந்தினர்கள் புத்தகத்தில் கையொப்பம்மிட்டார்.

நிகழ்வின் இறுதியில் இராணுவ தளபதியவர்கள் கொமாண்டோ படையணியின் படையினர்களின் நலன் கருதி பரிசாக காசோலை ஒன்றையும் வழங்கினார்.

இத் திட்டமானது இராணுவ தலைமையகத்தின் கொமாண்டோ படையணி மற்றும் அனைத்து அங்கத்தவர்களின் உதவியுடன் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் கட்டுமான பணி முடிவடைந்தது.

இந் நிகழ்விற்காக இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனாநாயக அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Buy Kicks | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp