19th January 2020 19:42:22 Hours
சிவனொலிபாத புனித யாத்திரை ஆரம்பத்தின் நிமித்தம் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 8 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையினரால் இம் மாதம் (20) ஆம் திகதி திங்கட்கிழமை சிரமதான சமூக நலத்திட்டத்தின் கீழ் சிவனொலிபாத சுற்றுபுற வளாகங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிவனொலிபாதமலை பாலபத்தால, எரத்ன வீதி முழுவதும் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 36 வீரர்களின் பங்களிப்புடன் இந்த சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்றன.
இப் பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, 12 ஆவது படை பிரிவின் படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 8 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையணியினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. latest Running | Men's Sneakers