Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2018 08:10:17 Hours

குளக்கட்டிற்கான பாதுகாப்பு அரண்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

நெடுக்கேணி மற்றும் குறும்புலியன்குளம் போன்றவற்றின் குளக்கட்டுகளின் நீர்மட்ட அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கும் பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் 20ஆவது இலங்கை சிங்க பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு சனிக் கிழமை (10) மாலை மேற்கொள்ளப்பட்டது.

மாந்தை கிழக்கின் - குறும்புலியன்குள பிரதேசத்தில் காணப்படும் பொதுமக்கள் தமது சுயூ விருப்புடன் இணைந்து அதிக மழைநீர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இக் குளக்கட்டின் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் இப் பணிகள் 61ஆவது படைத் தளபதியான பிரிகேடியர் கே டீ சி ஜி ஜெ திலகரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 612ஆவது படைப் பிரிவின் 20ஆவது இலங்கை சிங்க பாதுகாப்பு படையினர் மற்றும் 20 பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டனர்.

அத்துடன் இத் திருத்த வேலைப்பாடுகள் 61ஆவது படைத் தலைமையக தளபதியான கேர்ணல் கே எல் எஸ் எஸ் லியணகே அவர்களின் கண்காணிப்பில் 20அஆவது இலங்கை சிங்க பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஐ ஜெ விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் மல்லாவி திருத்தல் வேலைப்பாட்டு அதிகாரியவர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அதன் பின்னர் படையினரால் இந் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன் இக் குளக்கட்டின் நிலைமையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவின் நீர்பாசணத்தின் பிரதி பணிப்பாளர் மற்றும் பல உயர் அதிகாரிகள் இராணுவப் படையினர் மற்றும் பொதுமக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர். affiliate tracking url | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger