Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2019 11:49:51 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மார்ச் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இராணுவத்தினர்களுக்கான தங்குமிட ஒரு புதிய விடுதி தொகுதியொன்று திறந்து வைத்தார்.

இராணுவ பொறியியல் சேவைப் படையணியைச் சேர்ந்த கெப்டன் வி.எச்.ஜி.என்.ஆர் ஜயசிங்க அவர்களது தலைமையில் இந்த புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டது.

இந்த கட்டிட திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் 100 பௌத்த மதகுருமாரது பங்களிப்புடன் மஹாசங்க தேரர் அவர்களது ஆசிர்வாத சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது.

இந்த கட்டிட நிர்மான பணிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல்சந்துசித்த பனன்வல அவர்களது எண்ணக் கருவிற்கமைய மேற்கொள்ளப்பட்டன.Asics footwear | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival