Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் கூடைப் பந்து பயிற்சி முகாம் ஒழுங்குகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகம், இலங்கை கூடைப் பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னால் பிரதி தலைவர் அஜித் குறுப்பினால் தேசிய மட்ட பயிற்சியாளர்களின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பிரதேசத்தில்லுள்ள பாடசாலை கூடைப் பந்து வீரர்கள் மற்றும் இராணுவ விளையாட்டு வீரர்களுக்கும் கூடைப் பந்து தொடர்பாக அறியுரை நிகழ்த்தும் பயிற்சி முகாம் ஜூலை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை இராணுவ 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனஹே அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உணர்வுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சியின் மூலம் விளையாட்டு வீரர்களை தேசிய மட்டத்திற்கு உயரத்துவது பிரதான நோக்கமாகும்.இப் பயிற்சியை முடித்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு படை வினியோக நிர்வாக பிரதானி பிரிகேடியர் குமார ஹதுன்முல்ல கூடைப் பந்தாட்ட பயிற்சியாளர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கூடைப் பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள், மற்றும் விளையாட்டிற்கு பொறுப்பான ஆசிரியர்கள் கலந்து கொண்டன.

bridge media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals