Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2019 08:45:56 Hours

கிளிநொச்சியில் சிறந்த இசைக்குழு மற்றும் பாடகர்கள் தேர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களினால் முன் வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இம் மாதம் (6) ஆம் திகதி புதன் கிழமை நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழச்சியில் சிறந்த இசைக்குழு மற்றும் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்கள் வருகை தந்தார்.

இந்த போட்டிகள் இரண்டு கட்டத்தின் கீழ் இடம்பெற்றது. முதலாவதாக 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 – 26 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 6 இன்னிசைக் குழுவின்ர் 6 கலிப்ஷோ பேன்ட் குழுவினர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக் காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர்ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக திரு பிரதீப் போஹகவத்த, கெப்டன் ஏ.எஸ் ருவன்பெரும, நன்னடக்கத்தை அதிகாரி பீ.ஐ.டி பெரேரா அவர்கள் இணைந்திருந்தனர். சிறந்த இன்னிசை குழுவாக 1 ஆவது கஜபா படையணியும், சிறந்த கெலிப்ஷோ பேன்ட் குழுவினர்களாக 6 ஆவது இலங்கை சிங்கப் படையணியும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த பாடகர்களான தேர்வில் 1 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் இந்திக முதலாவது இடத்தையும், 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் திசாநாயகஇரண்டாவது இடத்தையும், 21 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் சாதாரன போர் வீரன் ஜனபிரிய அவர்கள் 3 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.Running sneakers | adidas NMD Human Race