Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கஜபா படையணிகளுக்கு இடையிலான் கரப்பந்தாட்ட போட்டிகள்

கஜபா படையணியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான கரப்பந்தாட்ட போட்டிகள் இம் மாதம் 22 – 24 ஆம் திகதி வரை அநுராதபுரத்தில் அமைந்துள்ள சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.

கஜபா படையினரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் மற்றும் படையினரது பங்களிப்புடன் இந்த போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த போட்டிகளில் கஜபா படையணியைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றி கொண்டன. இறுதிச் சுற்றுப் போட்டிகளில் முதலாவது இடத்தை 11 ஆவது கஜபா படையணியினர் பெற்று வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டதுடன் இரண்டாவது இடத்தை 3 ஆவது கஜபா படையணியும், மூன்றாவது இடத்தை 15 கஜபா படையணியினர் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கஜபா படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் நிலங்க பெர்ணாண்டோ அவர்கள் வருகை தந்து சிறப்பித்து வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்து கௌரவித்தார். Nike sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C