Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th August 2019 11:28:19 Hours

இலங்கை இராணுவ அக்கடமியில் புதிதாக நிறுவப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

தியத்தலாவiயில் அமைந்துள்ள இலங்கை இராணுவ அக்டமியில் கல்வி பயிலும் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை பெறுகின்ற படையினருக்கான அவர்களின் நலன் கருதி இரு மாடிக் கட்டடமானது அமையப்பெற்றதுடன் இதற்கான திறப்பு விழா நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (11) இராணுத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மேலும் புதிய வகுப்பறைகள் உள்ளடங்களாக அமையப்பெற்ற இக் கட்டடத்தின் திறப்பு விழாவில் மேஜர் ஜெனரல் (ஓய்வு) என் ஜெ வல்கம மேஜர் ஜெனரல் (ஓய்வு) உதய பெரேரா மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டீ என் கொஸ்வத்த லெப்டினன்ட் கேர்ணல் (ஓய்வு) வசந்த (கற்கை நெறி பொறுப்பதிகாரி) மற்றும் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இக் கட்டடத்தில் இதில் பயிற்சிகளைப் பெறும் கெடெட் அதிகாரிகளுக்கான கணனி தொழில்நுட்ப அறையும் அமையப்பெற்றுள்ளது. மேலும் இலங்கை இராணுவ அக்கடமியின் தளபதியான பிரிகேடியர் எஸ் கே ஈஸ்வரன் அவர்களின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவத் தளபதியவர்களால் இக் கட்டடமானது திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மினி டோர்ச் போன்றனவும் கண்காணிக்கபட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்கள் புதிதாக அமையப் பெற்ற கணனி தொழில்நுட்ப அறையையும் பார்வையிட்டார். மேலும் இக் கட்டடத்தின் நிர்மானிப்பு பணிகளுக்கான உதவிகளை வழங்கிய ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான நன்றிகளையும் இராணுவத் தளபதியவர்கள் தெரிவித்தார்.

மேலும் இராணுவத் தளபதியவர்கள் அடிப்படை கெடெட் பயிற்சிகளைப் பெறும் மாணவர்களுக்கு இராணுவ அக்கடமியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததோடு அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் இராணுவ அக்கடமியின் இப் புதிய கட்டடத்திற்காக சுமார் 49.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு இவ் அக்கடமியின் முன்னால் தளபதியான பிரிகேடியர் எச் எச் ஏ எஸ் பி கே சேனாரத்ன அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Sports brands | Shop: Nike