Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2019 14:00:43 Hours

இராணுவ ஸ்னைபர் பயிற்சி பாடசாலையில் புதிய கருத்தரங்கு சாலை திறந்து வைப்பு

தியதலாவையில் உள்ள இராணுவ ஸ்னைபர் பயிற்சி பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட படையினர்களது சுபசாதனை கட்டிடம் மற்றும் கருத்தரங்கு சாலை இம் மாதம் (18) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ ஸ்னைபர் பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதியான பிரிகேடியர் ஜி.எம்.சி.கே.பீ ஏகநாயக அவர்களது அழைப்பையேற்று பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இந்த புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக நிர்மானிக்கப்பட்ட கருத்தரங்கு சாலை 100 அடி நீளத்தையும், 20 அடி அகலத்தையும் கொண்டிருந்தது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். bridge media | Nike Air Max 270