01st April 2019 16:43:37 Hours
குட்டிகலையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ பொதுசேவைப் படையணி பயிற்சி பாடசாலையில் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும்’ சாஜன் தரத்திலிருக்கும் படையினர்களுக்கான தங்குமிடவசதிக்கான புதிய கட்டிடமொன்று இராணுவ பொதுசேவைப் படையணியின் படைத் தளபதியும், இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் வஜீர பலிகக்கார அவர்களினால் மார்ச் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு பயிற்சி பாடசாலை வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வும் இவரினால் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ பொது சேவைப் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேர்ணல் சாலிய பத்மசாந்த அவர்கள் மற்றும் 1 ஆவது பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் திலக் திசாநாயக அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த திறப்பு விழா நிகழ்வில் இராணுவ வேளாண்மை மற்றும் கால்நடைகள் பணிப்பாளர் பிரிகேடியர் பூவெனக குணரத்ன, பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் சானக வேரஹொட, பிரதான அக தனிக்கையாளர் கேர்ணல் த சொயிஷா ( கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்), சம்பளம் மற்றும் பதிவேட்டுபிரதி பணிப்பாளர் கேர்ணல் பாலித ஹேவாவஷம், பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேர்ணல் சாலிய பத்மசாந்த, பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். jordan release date | New Releases Nike