28th February 2019 15:01:09 Hours
ஜனாதிபதி பணிக்குழுவின் பேதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நிகழ்ச்சி திட்டமானது இலங்கை இராணுவத்தினருக்கு பணியாற்றும் இடங்களில் மற்றும் அனைத்து பாடசாலைகளிலும் பேதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு தொடர்பாக பயிற்றுவிப்பதற்காக இப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய இந்த பயிற்றுவிக்கும் நிகழ்வானது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் அறிவுரைக்கமைய கடந்த (26) ஆம் திகதி செவ்வாய் கிழமை பூஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ காலாற் பயிறச்சி முகாமில் சிவில் வள உறுப்பினர்களின் பங்களிப்புடன் போதை பொருள் தடுப்பு சிறப்பு விரிவுரை ஜனாதிபதி பணிக்குழுவினர்களால் வழங்கப்பட்டது.
இந்த பயிற்ச்சியானது இராணுவத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பணிக்குழுவின பேராசிரியர் தயனாத; சமரசிங்க, டாக்டர் சஞ்சீவ ரத்னவீர மற்றும் திரு எம்.எம். திலகரட்ன,ஆகியோர்களால் பேதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு எனும் தலைப்பில் 32 பயிற்றுவிப்பாளர்களுக்கு விரிவுரை வழங்கப்பட்டன.
இப் பயற்ச்சி திட்டமானது 58 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் மேற் பார்வையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டது.
அதன்படி இப் பயிற்ச்சி நிறைவிற்கு பின் அனைத்து இராணுவ பயிற்றுனர்கள் இராணுவத்தின் தளபதி அவர்களின் உத்தரவிற்கமைய மேற்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இப் பயிறச்சிகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer