இராணுவ படையணிகளுக்கு, இடையிலான 2017 ஆம் ஆண்டு கரப்பந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டிகள் மகரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளரங்க விளையாட்டு தடாகத்தில் (28) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் படையணிகளுக்கு இடையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு இடையிலான போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க மற்றும் பிரகேடியர் தேவிந்திர பெரேரா அவர்கள் வரவேற்றார்கள்.
இந்த போட்டிகள் இராணுவத்தினருக்கு இடையில் உள்ள 20 ஆண் அணிகளுக்கும் 4 பெண்கள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
ஆண் அணிகளுக்கு இடையிலான இறுதிச் சுற்றுப் போட்டிகள் இராணுவ கஜபா படையணி மற்றும் இலேசாயுத காலாட் படையணிகளுக்கு இடம்பெற்ற இடையில் கஜபா படையணி வெற்றியை சுவீகரித்து கொண்டன.
இந்த நிகழ்வை பார்வையிட மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா ,மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் பார்வையிட்டனர்.
மேலும் வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு இராணுவ தளபதி ,மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் வெற்றிப் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
Best Authentic Sneakers | Nike Air Max 270