இராணுவ குத்துச் சண்டை சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டு படையணிகளுக்கு இடையிலான குத்துச் சண்டை இறுதிச் சுற்றுப் போட்டிகள் (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பனாகொடை இராணுவ உள்ளரங்கத்தில் இடம்பெற்றன.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெற்ற போட்டிகளில் 14 படையணியைச் சேர்ந்த 101 குத்துச் சண்டை வீரர்கள் பங்குபற்றினர்.
இறுதிச் சுற்று நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ குத்துச் சண்டை சங்கத்தின் தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு பரிசினையும் வழங்கி வைத்தார்.
இந்த போட்டியில் விஜயபாகு காலாட் படையணி முதலாவது இடத்தையும், சமமான வெற்றிகளை இலங்கை இராணுவ சேவை படையணி மற்றும் கஜபா படையணி பெற்றுக் கொண்டது.
இந்த போட்டியில் சிறந்த குத்துச் சண்டை வீரனாக மின்சார பொறியியலாளர் படையணியின் ஆர்.யூ. ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் கலந்து கொண்டனர்.
spy offers | Nike Shoes