Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கட் போட்டிகள்

புத்தளையில் அமைந்துள்ள துறைசார் அபிவிருத்தி நிலையத்தினால் முதல் தடவையாக கிரிக்கட் போட்டிகள் இந்த நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிலையத்தில் பயிற்சி கட்டளைகளை மேற்கொள்ளும் 5, 17 இலக்கங்களையுடைய அதிகாரிகளுக்கு இடையில் இந்த கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றன.

கிரிக்கட் போட்டிகளில் இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் K.G.M பண்டார அவர்களது அணி சிறந்த அணியாக விளங்கியது.

இந்த போட்டிகளில் இரண்டாவது இடத்தை இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் P.G.A.P ஜயவர்தன அவர்களது அணியினர் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இந்த போட்டிகளில் சிறந்த ஆட்ட நாயகனாக இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் K.W.K.R ஜயசிங்க அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர்களுக்கு 140 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

சிறந்த பந்து வீச்சாளராக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் T.R.C.S தென்னகோன் அவர்கள் தேரந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கு கட்டளை தளபதி அவர்கள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்து கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Gifts for Runners