Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2019 13:12:47 Hours

இராணுவத்தின் உதவியுடன் வெள்ள அனர்த்தத்தின் போது தேசமடைந்த பாலர் பாடசாலை புனரமைப்பு

யாழ் குடா நாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்திருந்த ஆனைக்கோட்டை முன்பள்ளி பாடசாலை மற்றும் மைதானம் இராணுவத்தினரது உதவியுடன் புனரமைக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களது தலைமையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த மைதானங்கள் புனரமைக்கப்பட்டு இந்த பாடசாலை நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட்டிருந்தன.

புனரமைக்கப்பட்ட பாலர் பாடசாலை மற்றும் விளையாட்டு மைதானம் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பாலர் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் இராணுவத்தினரால் விஷேட தேவையுடைய நபர்களுக்கு சக்கர நாற்காலிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. url clone | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ