10th January 2019 12:00:32 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ, சிவில் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது.
இராணுவ அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் 11 ஆவது கஜபா படையணியை தோல்வியடையச் செய்து 21 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
மேலும் மாங்குளம் மஹா வித்தியாலய கழகம் மற்றும் கரச்சி விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் கரச்சி கழகம் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதில அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு வெற்றி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
மேலும் 65 ஆவது படைப் பிரவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரபெரும அவர்களும் இந்த நிகழ்விற்கு வருகை தந்து வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார். latest jordans | Nike