19th June 2018 17:23:47 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் உள்ள முதியான்கட்டுகுளம் பட்டாலியன் பயிற்சி முகாமில் (16) ஆம் திகதி சனிக் கிழமை இராணுவத்தினருக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகளும் இடம்பெற்றன. இந்த பயிற்சிகளில் ஒரு இராணுவ அதிகாரி உட்பட் 35 இராணுவத்தினர் ஈடுபட்டனர். 59 ஆவது படைப் பிரிவிற்குரிய 1 ஆவது இலேசாயுத படையணி, 68 ஆவது படைப் பிரிவிற்குரிய 14 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 64 ஆவது படைப் பிரிவிற்குரிய 23 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த படை வீரர்களுக்கு விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவ விஷேட படையணியைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது பூரண ஏற்பாட்டுடன் 642 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்களது தலைமையில் இந்த செயலமர்வு மற்றும் பயிற்சிகள் இடம்பெற்றன.
Authentic Sneakers | UK Trainer News & Releases