Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தினருக்கான மாகாணங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 2017 ஆம் ஆண்டு மாகாணங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் ஒழுங்கு செய்து (15) ஆம் திகதி பூந்தோட்ட கல்லுாரி கல்வி வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த போட்டிகளின் இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வருகை தந்தார். போட்டியில் 21,54,56,61,62 ஆவது படைப் பிரிவு, முன் பராமரிப்பு பாதுகாப்பு தலைமையகம் மற்றும் 2, 4 மகளீர் படையணியைச் சேர்ந்த வீர வீராங்களைகள் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த போட்டிகளுக்கான முழுமையான ஏற்பாடும் 56 மற்றும் 62 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

மேலும் இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற படை வீரர்களுக்கு வன்னி தளபதி சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

இந் நிகழ்விற்கு படைப் பிரிவின் தலைமையகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

trace affiliate link | Men’s shoes