Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2019 08:30:23 Hours

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 65, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பள்ளிநகர் தமிழ் அழகன் முன்பள்ளி வளாகத்தில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது கண்காணிப்பின் கீழ் இந்த சிரமதான பணிகள் இடம்பெற்றது.

இந்த சிரமதான பணிகளில் இராணுவ அதிகாரி உட்பட 31 படையினர் இணைந்திருந்தனர். அத்துடன் இந்த பணிகளில் முன்பள்ளி பாடசாலையில் பெற்றோர்களும் இணைந்திருந்தனர். Sports News | Air Jordan