15th June 2018 12:41:59 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வவுனியாவில் உள்ள போகஸ்வெவ மஹா வித்தியாலய மாணவர், மாணவிகள் ஆறு பேருக்கு பாடசாலை உபகரணங்கள் (12) ஆம் திகதி செவ்வாய் கிழமை வழங்கப்பட்டன.
போகஸ்வெவ பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் திறமை மிக்க மாணவ ,மாணவிகளுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் இராணுவத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த பணிகள் 66 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 66 ஆவது படைத் தளபதி வருகை தந்து இந்த பாடசாலை உபகரணங்களை மாணவர், மாணவிகளுக்கு நன்கொடையாக வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றேர்கள் கலந்து கொண்டனர்.
best Running shoes | Air Jordan Release Dates 2020