04th January 2019 16:39:46 Hours
அஸ்கிரிய பிரதான பௌத்த மதகுருவான மகாநாயக வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் அவர்களின் அனுசரனையில் அனுப்பப்பட்ட உலர் உணவு பொருட்கள் இராணுவத்தினரின் ஏற்பாட்டுடன் யாழ் குடா நாட்டில் வறுமை கோட்டின் கீழ் குறைந்த வருமானத்தில் வாழும் 335 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன.
சுமார் பத்து லட்சம் பெறுமதிமிக்க இந்த உலர் உணவுகள் அஸ்கிரிய பிரதான பௌத்த மதகுருவான மகாநாயக வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் அவர்களினால் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் இராணுவத்தினரால் இந்த உலர் உணவு பொருட்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்த உலர் உணவு பொருட்களில் அரிசி, பால் மா, பருப்பு, கருவாடு, டின் மீன்கள், தானியங்கள், எண்நெய் போத்தல்கள், சவக்காரம், நெத்தலி கருவாடு, போசா சத்து உணவுகள், சீனி உள்ளடக்கப்பட்டிருந்தது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இந்த உலர் உணவு பொருட்கள் யாழ் குடா நாட்டிலுள்ள கரவெட்டி, குடாரப்பு, புனிதநகர், சுலிபுரம் மற்றும் அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச வாசிகளுக்கு ஜனவாரி (1 -2) ஆம் திகதிகளில் வழங்கப்பபட்டன.short url link | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE