Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2019 16:58:50 Hours

இராணுவத்தினரால் இலாபத்தை பெறும் நெல் இனம் அறிமுகம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (18) ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசங்களில் உள்ள 64 விவசாயிகளுக்கு வேளாண்மை வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்கள் இல்லாமல் வளரக்கூடிய ஒரு புதிய நெல் இன விதைகள் 57 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இவைகள் விவசாய திணைக்களத்தில் ஆலோசனை வசதி மையத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது. இதன் போது இந்த புதிய நெல் வகைகள் மற்றும் முட்டை விதைகளின் பயிர் வகைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இந்த விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார். Sports News | Air Jordan