Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th March 2019 15:14:20 Hours

இராணுவத்தினரது உதவியுடன் பொது மக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் விநியோகம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் விஸ்வமடு, தோட்டையடி, சுன்டிகுளம்,தேராவில், பூனரவி, மயில்வானபுரம், பாரதிபுரம்,நெத்தலியாறு பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு இந்த கண்ணாடிகள் இம் மாதம் (8) ஆம் திகதி இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

மலேசியா மஹா கருணா பௌத்த சமூகம் மற்றும் இலங்கை வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் முழுமையான அனுசரனையுடன் 570 பொது மக்களுக்கு இந்த கண்ணாடிகள் இராணுவத்தினரது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு தர்மபுரம் புனித லூக் கிறிஸ்தவதேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இந்தமூக்கு கண்ணாடி வழங்கும்நிகழ்வில் மஹா கருணா பௌத்த சமூகத்தின் பிரதிநிதி திருமதி சுவினித்தா வீரசிங்க மற்றும் சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பேராசிரியர் எம். நந்தலால் , 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் கலந்து கொண்டனர். bridge media | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK